கவிதை எழுதினேன்!
கவிதை எழுதினேன்,
எழுத்து
பிழையோடு,
பிழை திருத்த விருப்பமில்லை,
பிழை -
எழுத்தில் மட்டுமே இல்லை,
பிழையும்,
தோல்வியும் மட்டுமே தோழர்கள் எனக்கு,
என்றும்
என்னை நீங்காத தோழர்கள்,
உண்மை நட்பின் இலக்கணங்கள்.
கவிதை எழுதினேன்,
ஆயிரம்
கவிதை,
ஆயிரம்
எண்ணங்கள் மனதில் உண்டு,
எழுத்துகளில்
இல்லை,
என் கவிதைகளிலும் இல்லை,
சொல்லாமலே
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
- என் துக்கங்களை,
எனக்குள்
நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
கவிதை எழுதினேன்,
எதுகை இல்லாமல்,
மோனை இல்லாமல்,
நானே இல்லையாம் - எதுகைக்கு எங்கே போவேன்?
எங்கே என்னை நான் தொலைத்தேனோ?
தேடி பிடிக்க அடையாளங்களை தேடுகிறேன்.
தொலைந்தவனும்
நானே, தேடுப்பவனும் நானே - வேடிக்கை!
Comments
Post a Comment