கண்ணாமூச்சி...!
கண்ணாமூச்சி
எனக்கும் பிடித்திருக்கிறது
இந்த கண்ணாமூச்சி ஆட்டம்,
நிலவு வரும்போது கதிரவன் மறைவதும்,
கதிரவன் வரும்போது நிலவு மறைவதும்...!
இந்த கண்ணாமூச்சி ஆட்டம்,
நிலவு வரும்போது கதிரவன் மறைவதும்,
கதிரவன் வரும்போது நிலவு மறைவதும்...!
தண்டனைகள்
சிரித்து பழகிய குற்றங்கள் எல்லாம் அவளுடையது - ஏனோ
அதற்குரிய தண்டனைகள் மட்டும் என்னுடையது....!
அதற்குரிய தண்டனைகள் மட்டும் என்னுடையது....!
புரியாதா உனக்கு...?
நான் உன்மீது கொண்ட காதலுக்கு
ஏனடி உன் இதயத்தையே வதைத்துக் கொள்கிறாய்...?
வலிப்பது என் இதயம் என புரியாதா உனக்கு...?
ஏனடி உன் இதயத்தையே வதைத்துக் கொள்கிறாய்...?
வலிப்பது என் இதயம் என புரியாதா உனக்கு...?
என் கவிதை
உணர்வுகளை கவிதையாக்கி அவளிடம் - சமர்ப்பித்தேன்,
"யார் அந்த பெண்...?" என கண் சிமிட்டி,
உதட்டில் புன்னகையோடு கேட்டால்,
அவள் தான் என அவளுக்கே தெரிந்தபின்பும்,
பிடித்திருக்கிறது அவளுக்கு என் கவிதை - ஆனால்
புரிந்துக் கொள்ளவில்லை அவள் என் மனதை...!
"யார் அந்த பெண்...?" என கண் சிமிட்டி,
உதட்டில் புன்னகையோடு கேட்டால்,
அவள் தான் என அவளுக்கே தெரிந்தபின்பும்,
பிடித்திருக்கிறது அவளுக்கு என் கவிதை - ஆனால்
புரிந்துக் கொள்ளவில்லை அவள் என் மனதை...!
நன்றி:http://www.vengayam.net/tamil/trans/
Comments
Post a Comment