கனவுகள்...!

கனவுகள் 
கண் விழித்துக் கொண்டே கனவுகள்,
கனவிலும் அவளே...!
கனவைக் கலைப்பவளும் அவளே...!


கவிதை
கவிதை எழுத நினைத்தேன்,
விழுந்தேன்,புரண்டேன்,எழுந்தேன்,
அவள் பெயர் சொன்னேன்,
அடடா...கவிதை...!

தடுமாற்றம்
நடை பழகும்பொழுது வந்த
அதே தடுமாற்றம்,
நீ அலைபேசியில் அழைக்கும்போதெல்லாம்...!

பௌர்ணமி
இரசிக்கும்படி ஓர்
பௌர்ணமி வெளிச்சம்,
ஓ...! அது அவள் முகம்...!

நன்றி:http://www.vengayam.net/tamil/trans/

Comments