பார்வைகள்...!
பார்வைகள்
எதிர்பாராமல் மோதிக்கொள்ளும்
பார்வைகள்
காதலில் இன்பம்…!
(துன்பமும் கூட…!)
கரைக்கிறது
கண்களில் நீர்
வழிந்திருந்தால்,
கவலைகள் கரைந்திருக்கும்,
மனதில் வழிகிறது
– அது
என்னையே கரைக்கிறது…!
வெற்றிடம்
மனம் ஒரு வெற்றிடம்
காற்றாய் காதல்
பாயும்
வெற்றிடத்தின்
வெறுமையை
உணர்கிறேன் நான்…!
மௌனம்
கைபேசி இணைப்பில்
நாம் பேசும் மௌனம்
– அது
மனம் பேசும் காதல்…!
மௌனம் மிகவும் பிடிக்கும்...
ReplyDelete